பதிவு செய்த நாள்
13
அக்
2021
11:10
புதுச்சேரி : தர்ம சம்ரக் ஷண சமிதி நடத்தும் சத சண்டி ஹோமத்தில், 6ம் நாளான நேற்று அம்மன் கவுமாரி அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
புதுச்சேரி, தர்ம சம்ரக் ஷண சமிதி சார்பில், நவராத்திரியை முன்னிட்டு, 2வது ஆண்டாக சத சண்டி ஹோமம் நடத்தப்பட்டு வருகிறது.இ.சி.ஆரில் உள்ள சங்கர வித்யாலயா பள்ளியில், கடந்த 7ம் தேதி துவங்கி, நடைபெற்று வருகிறது. 6ம் நாளான நேற்று, அம்மன் கவுமாரி அலங்காரத்தில் எழுந்தருளினார்.காலை 7:00 மணிக்கு கோ பூஜையுடன் ஹோமம் துவங்கியது. சோம கும்ப பூஜை, பீட பூஜை, தீப பூஜை வேதிகார்ச்சனை,
பாராயணம் நடந்தது.தொடர்ந்து சுமங்கலிகள், கன்யா, வடு, தம்பதியர் பூஜைகளுடன் மதியம் 1.00 மணிக்கு மஹா பூர்ணாஹூதி நடைபெற்றது.யாகத்தை சர்வசாதகம் கீதாராம சாஸ்திரி வழிகாட்டுதலோடு, அசோக் சாஸ்திரி நடத்தினார். மாலையில் மூலமந்திர ஜபம், லலிதா சஹஸ்ரநாம பாராயணம், வேதபாராயணம், இசைக் கச்சேரி, மகா தீபாராதனை நடைபெற்றது. இப்பூஜைகள் வரும் 15ம் தேதி வரை தினசரி நடைபெறும் என சமிதி தலைவர் ஸ்ரீநிவாசன், செயலாளர் சீதாராமன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.