பதிவு செய்த நாள்
13
அக்
2021
03:10
கோயம்பேடு : ஆயுத பூஜையை முன்னிட்டு, கோயம்பேடு மார்க்கெட்டில் பூஜை பொருட்கள் விற்பனை களை கட்டியுள்ளது.
கோயம்பேடு மார்க்கெட்டில், ஆண்டுதோறும் ஆயுத பூஜை, பொங்கல் உள்ளிட்ட பண்டிகையின் போது, அங்காடி நிர்வாக குழு சார்பில், பூஜை பொருட்கள் விற்பனைக்காக, பூ மார்க்கெட்டில், சிறப்பு சந்தை திறக்கப்படுவது வழக்கம்.தளர்வுஇந்த ஆண்டு, கொரோனா தொற்று காரணமாக, சிறப்பு சந்தை திறக்கப்படவில்லை.
அதற்கு பதில், மதியம் வரை செயல்பட்டு வந்த மார்க்கெட் விற்பனை நேரம், பண்டிகையை முன்னிட்டு, 14ம் தேதி வரை மாலை, 5:00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு, கொரோனா ஊரடங்கு காரணமாக ஆயுத பூஜை விமர்சையாக கொண்டாடப்படவில்லை. தற்போது, கொரோனா தாக்கம் குறைந்து, தளர்வு கள் அறிவிக்கப்பட்டுள்ளதால், ஒவ்வொரு வீட்டிலும், நவராத்திரி விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.ஆயுத பூஜை நாளில், இருசக்கர வாகனம், ஆட்டோ, கார், லாரி, பஸ் உள்ளிட்ட வாகங்கள் கழுவப்பட்டு, அதற்கு பூஜை போடப்படுவது வழக்கம். அதே போல், அனைத்து அலுவலகங்கள், வீடுகளிலும், ஆயுத பூஜை சிறப்பாக கொண்டாடப்படும். சூடு பிடித்தது. இதனால், கோயம்பேடு மார்க்கெட்டில், ஆயுத பூஜைக்கான பூஜை பொருட்கள் விற்பனை சூடு பிடித்துள்ளது. பூ மார்க்கெட்டில் நேற்று மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. நுகர்வோர் வரத்து அதிகரித்ததால், பூஜை பொருட்களின் விற்பனையும் களைகட்டியது.