சிவகாசி: சிவகாசி ஈஞ்சார் நடுவப்பட்டியில் அமைந்துள்ள வெயிலுகந்தம்மன் கோயிலில் 18 பட்டி கிராம மக்கள் பங்கேற்ற பொங்கல் திருவிழா சிறப்பாக நடந்தது. வேண்டுராயபுரம். சாமிநத்தம் , நாகலாதபுரம் முத்துராமலிங்கம் நகர் உள்ளிட்ட 18 கிராமங்களைச் சேர்ந்த மறவர் சமுதாயத்தினர் அவரவர் ஊரில் உள்ள கோயில்களில் சுவாமி கும்பிட்ட பின்னர் மொத்தமாக நடுவப்பட்டியில் அமைந்துள்ள வெயிலுகந்தம்மன் கோயிலுக்கு வந்து சுவாமி கும்பிட்டனர். ஒவ்வொரு கிராமத்தினரும தனித்தனியாக முளைப்பாரி, கரகாட்டத்துடன் வந்து மொத்தமாக சுவாமி கும்பிட்டு வழிபட்டனர்.