கொழும்பு: நவராத்திரிவிழாவை, இலங்கை பிரதமர் ராஜபக்சே, தனது குடும்பத்தினருடன் கொண்டாடினார்.
தலைநகர் கொழும்புவில் உள்ள பிரதமரின் இல்லத்தில் இன்று (அக்.14) நடந்த நவராத்திரி விழாவில், ராஜபக்சே, குடும்பத்தினர், பா.ஜ. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி , மற்றும் நண்பர்கள் அவருக்கு நெருக்கமானவர்கள் கலந்து கொண்டனர். கொலு வைக்கப்பட்டு பாரம்பரிய பூஜை, வழிபாடுகள் நடந்தது. டுவிட்டரில் ராஜ பக்சே பதிவேற்றியது, எனது நீண்டகால நண்பர் மற்றும் சகாக்களுடன் நவராத்திரி கொண்டியது மிகவும் மகிழ்ச்சி. அனைவருக்கும் பாதுகாப்பான, வளமான , ஆசீர்வதிக்கப்பட்ட நவராத்திரியாக அமைய வாழ்த்துக்கள். கடவுளின் ஆசிர்வாதங்களுடன் நாம் பயணிக்கும் பாதையில் வெற்றி ஒளிர வேண்டும். இவ்வாறு ராஜபக்சே குறிப்பிட்டுள்ளார்.