அவிநாசி: ஆயுத பூஜையை முன்னிட்டு, கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.
அவிநாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், ஆயுதபூஜையை முன்னிட்டு, மக்கள், அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலுக்கு சென்று வழிபட்டனர். வீடுகளில், நவராத்திரி கொலு வைத்திருந்தவர்கள், சிறப்பு வழிபாடு செய்தனர். அவிநாசி நகரை சுற்றியுள்ள பனியன் நிறுவனங்களில், ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது.