தேவகோட்டை: தேவகோட்டை நித்தியகல்யாணிபுரத்தில் உள்ள சவுபாக்ய துர்க்கை அம்மன் கோயிலில் துர்கா பூஜையை முன்னிட்டு ஒன்பது நாட்கள் நவதுர்கா ஹோமம் நடந்தது. தொடர்ந்து அபிஷேகம் சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று முன்தினம் துர்காஷ்டமியை முன்னிட்டு சிறப்பு ஹோமங்கள் அபிஷேகங்கள் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.
துர்காஷ்டமியை முன்னிட்டு பிடாரி பத்ரகாளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. தேவகோட்டை அருகே வெளிமுத்தி விலக்கில் உள்ள பிருத்தியங்கிரா தேவி கோயிலில் துர்காஷ்டமியை முன்னிட்டு மூலமந்திரம் உட்பட சிறப்பு ஹோமங்கள் சேது குருக்கள் தலைமையில் நடந்தன. சிறப்பு அலங்காரம் செய்விக்கப்பட்டு பூஜை கள் நடந்தன. பெண்கள் உட்பட ஏராளமானோர் அம்மன் தரிசனம் செய்தனர். நவராத்திரி துர்காஷ்டமியை தொடர்ந்து சிவன்கோயில்களில் கொலு மண்டபத்தில் அம்பாள் துர்க்கை அவதாரத்தில் காட்சியளித்தார். ராமர் கோயிலில் மோகினி அவதாரத்தில் காட்சியளித்தார்.