நன்மை தருவார் கோயிலில் அம்பாள் அம்பு எய்தல் நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16அக் 2021 11:10
மதுரை: இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் நவராத்திரி ஒன்பதாம் நாள் விஜயதசமி முன்னிட்டு அம்பாள் அம்பு எய்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் மேதகு ராணி டிஎஸ்கே மதுராந்தகி நாச்சியார் அவர்கள் நிர்வாகத்துக்கு உட்பட்ட மதுரை இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில்1431 பசலி நவராத்திரி உற்சவம் நடைபெற்று வருகிறது. நவராத்திரி 9ம் நாளில் (அக்.15) சிவ பூஜை அலங்காரத்தில்விஜயதசமி முன்னிட்டு அம்பாள் அம்பு எய்தல் நிகழ்ச்சி அரசு வழிகாட்டுதலின்படி திருக்கோயில் வளாகத்தில் (பிரகாரத்தில்) மாலை சிறப்பாக நடைபெற்றது. பக்தர்கள் தரிசனம் செய்தனர்.