Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிள்ளையார்பட்டியில் பக்தர்கள் ... ஷீரடி சாய்பாபா கோயிலில் சிறப்பு வழிபாடு ஷீரடி சாய்பாபா கோயிலில் சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
4 கோவிலின் 1.36 லட்சம் சதுர மீட்டர் இடம் புதிய மெட்ரோ திட்டத்துக்கு ஒதுக்கீடு
எழுத்தின் அளவு:
4 கோவிலின் 1.36 லட்சம் சதுர மீட்டர் இடம் புதிய மெட்ரோ திட்டத்துக்கு ஒதுக்கீடு

பதிவு செய்த நாள்

16 அக்
2021
11:10

புதிய மெட்ரோ பாதை மற்றும் நிலையங்கள் கட்டுவதற்கு, நான்கு கோவில்களுக்கு சொந்தமான 1.36 லட்சம் சதுர மீட்டர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது.

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாவது கட்ட திட்டத்தில், 61 ஆயிரத்து 843 கோடி ரூபாய் செலவில், மூன்று வழித்தடங்களில் 118.9 கி.மீ., மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது. மாதவரம் - சிறுசேரி சிப்காட் இடையே 45.8 கி.மீ., துாரமும், பூந்தமல்லி பைபாஸ் - கலங்கரைவிளக்கம் இடையே 26.1 கி.மீ., துாரமும், மாதவரம் - சோழிங்கநல்லுார் இடையே 47 கி.மீ., துாரமும் பாதை அமைக்கப்பட உள்ளது.இப்பாதைகள் அமைப்பதற்கு தேவையான இடங்கள் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

இத்திட்டத்தில், பூந்தமல்லி பைபாஸ் - கலங்கரைவிளக்கம் மெட்ரோ பாதையில், பூந்தமல்லி பஸ் டெப்போ அருகே மெட்ரோ நிலையம் கட்டுவதற்கு, பஸ் நிலையம் மற்றும் பணிமனை அருகில், திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜபெருமாள் கோவில்களுக்கு சொந்தமான, 1 லட்சத்து 35 ஆயிரத்து 397 சதுர மீட்டர் இடம் கையகப்படுத்தப்படுகிறது.இப்பாதைக்கு ஆற்காடு சாலையில், வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான, 1,125 சதுர மீட்டர் நிலங்கள் கையகப்படுத்தப்படுகின்றன. இத்திட்டத்தில், மாதவரம் - சிறுசேரி சிப்காட் இடையேயான புதிய பாதையில், துரைப்பாக்கம் மெட்ரோ நிலையம் கட்டுவதற்கு, தேரடி நாகாத்தம்மன் கோவிலுக்கு சொந்தமான, 246 சதுர மீட்டர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது.

இவ்வகையில், நான்கு கோவில்களுக்கு சொந்தமான 1 லட்சத்து 36 ஆயிரத்து 768 சதுர மீட்டர் நிலம் கையகப்படுத்துவதற்கு ஏற்பாடு நடந்து வருகிறது.மின் பணிகளுக்கு ஒப்பந்ததாரர்கள்மாதவரம் - சோழிங்கநல்லுார், மாதவரம் - சி.எம்.பி.டி., இடையே, மெட்ரோ பாதையில் மின்மயமாக்கல் பணிக்கு ஒப்பந்ததாரர்கள் நியமிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சென்னை மெட்ரோ ரயில் திட்டப்பணிகளின் கட்டுமானங்களுக்கான ஒப்பந்ததாரர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். ஒப்பந்ததாரர்கள் நியமிக்கப்பட்ட பகுதிகளில், ஆரம்ப கட்டபணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகளுக்கு, ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை கடன் உதவி வழங்குகிறது.மெட்ரோ ரயில் பாதைகளுக்கு தேவையான மின்சார கட்டமைப்பு, வடிவமைப்பு, வினியோகம், மின் பாதை அமைத்தல், ஊழியர்களுக்கு பயிற்சி அளித்தல் மற்றும் ஆய்வுகள் மேற்கொள்வதற்கு, உலக அளவில் ஒப்பந்ததாரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. - நமது நிருபர் -

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
சிவகாசி; சிவகாசி அருகே திருத்தங்கலில் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் ஆனி பிரமோற்சவ திருவிழாவை ... மேலும்
 
temple news
கோவை; கொடிசியா வெங்கடேச பெருமாள் கோவிலில் ஆனி மாதம் திருவோண விரதத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
சபரிமலை; நவக்கிரக பிரதிஷ்டைக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. நாளை காலை 11:30 மணிக்கு நவக்கிரக ... மேலும்
 
temple news
காரைக்குடி; சாக்கோட்டையில் உள்ள சாக்கை வீரசேகர உமையாம்பிகை கோயில் ஆனித் திருவிழா தேரோட்டம் இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar