பாளை.,யில் தசரா விழா கோலாகலம்; 12 அம்மன் சப்பரம் அணிவகுக்க சூரசம்ஹாரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16அக் 2021 03:10
திருநெல்வேலி; திருநெல்வேலியில் தசரா விழா கோலாகலம் 12 அம்மன் கோயில்களின் சிலைகள் சிம்ம வாகனத்தில் அணிவகுக்க சூரசம்ஹாரம் நடைபெற்று முடிந்தது.
தென் மாநிலங்களில் கா்நாடக மாநிலம் மைசூர், தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்திற்கு அடுத்தபடியாக திருநெல்வேலி பாளையங்ககோட்டையில் நவராத்திரி தசரா விழா 10 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு தசரா விழா கடந்த 6ம் தேதி ஆயிரத்தம்மன் கோயிலில் கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து நெல்லையில் உள்ள அம்மன் கோயில்களில் தசரா பண்டிகை தொடங்கியது. ஆயிரத்தம்மன், பேராத்து செல்வி அம்மன், முத்தாரம்மன், தூத்துவாரி அம்மன், உச்சினிமாகாளி அம்மன், உலகம்மன், முப்பிடாதி அம்மன் என 12 கோயில்களில் அம்மன் கொலு வீற்றிருக்கும் வைபவம் நடைபெற்று வந்தது.
தலைவியான ஆயிரத்தம்மன்: கடந்த 9 நாட்களும் அம்மன் ஒவ்வொரு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இன்று 10ம் திருநாளான விஜயதசமியையொட்டி அம்மன் கோயில்களிலிருந்து மின்னொளியில் 12 சப்பரங்கள் இரவு வீதி உலா நடைபெற்றது. அரசு விதித்துள்ள விதிமுறைகளை கடைபிடித்து சப்பரங்கள் வீதி உலா வந்து எருமைகிடா மைதானத்தை வந்தடைந்தது. 12 சப்பரங்களும் ஒன்றாக அணிவகுத்து நிற்க சூரசம்ஹார நிகழ்வும் நடைபெற்றது. சூரன் 12 அம்பாளையும் சுற்றி வந்தததும் அனைத்து அம்மனுக்கும் தலைவியான ஆயிரத்தம்மன் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட சுலாயுதத்தால் தலையை வெட்டினா். தொடா்நது மகிஷ முகம் (எருமை தலை) கொண்டு ஆக்ரோஷத்துடன் போா் புாியவர அம்பாள் கோபத்துடன் மகிஷனை சம்ஹாரம் செய்தாா். பின்னா் அனைத்து அம்பாளுக்கும் கற்பூரம் காண்பிக்கப்பட்டது. நாளை ( நவ-17) தாமிரபரணி ஆற்றில் தீத்தவாாி நடைபெறும். கொரனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக தசரா திருவிழாவில் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இருந்தபோதும் விரதமிருந்த பக்தா்கள் இந் நிகழ்ச்சியினை நேரடியாக கண்டு மகிழ்ந்தனா். மாநகர காவல் துறையினா் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனா்.