பதிவு செய்த நாள்
16
அக்
2021
05:10
தொண்டாமுத்தூர்: பேரூர் ஆதீனத்தில், விஜயதசமியையொட்டி எழுத்தாணி பால் விழா நடந்தது. நவராத்திரியின் நிறைவு நாளான விஜயதசமி தினத்தில், குழந்தைகள் கல்வி மற்றும் கலையில் சிறந்து விளங்க, எழுத்தாணி பால் விழா நடத்தப்படுவது வழக்கம். பேரூர் திருமடத்தில் நடந்த எழுத்தாணி பால் நிகழ்ச்சியில், பேரூர் ஆதீனம் மருதாச்சல அடிகளார் தலைமை வகித்து, தேன் தடவிய எழுத்தாணி கொண்டு, குழந்தைகளின் நாவில் ஓம் என எழுதினார். அதன்பின், குழந்தையின் கை பிடித்து, தட்டில் நிரப்பப்பட்ட நெல்மணியில், எழுத கற்று கொடுத்தார். இந்நிகழ்ச்சியில் 25க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு, எழுத்தாணி பால் வழங்கி, கல்வி துவங்கப்பட்டது.