பாலக்காடு; பாலக்காடு கல்பாத்தி சாத்தபுரக்கில் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீட வேத அனுஷ்டான கேந்திரம் நேற்று துவங்கப்பட்டது.காஞ்சி சேவா சமிதி அறக்கட்டளை மாவட்ட தலைவர் ராமச்சந்திரா குத்து விளக்கேற்றி துவக்கிவைத்தார். முரளி தலைமை வகித்தார். அறக்கட்டளை உறுப்பினர் பிரசாத், ராமசுப்பிரமணியம், பிரகாஷ் முத்துசாமி ஆகியோர் பேசினர். தினமும் மாலையில் வேதபாட வகுப்பு நடைபெறும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.