ஐப்பசி பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு: மேல்சாந்தி தேர்வு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17அக் 2021 08:10
சபரிமலை: ஐப்பசி மாத பூஜைகளுக்காக, சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பபட்டது. இன்று புதிய மேல்சாந்தி தேர்வு நடக்கிறது.கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஐப்பசி மாத பூஜைகளுக்காக நேற்று நடை திறக்கப்பட்டது. மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடை திறந்து விளக்கேற்றினார். வேறு பூஜைகள் கிடையாது. இரவு 9:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. இன்று அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும் அபிஷேகம், நெய்யபிஷேகம், கணபதி ஹோமம் நடக்கும். அக்., 21 வரை பூஜைகள் நடைபெறும்.
தினமும் இரவு 7:00 மணிக்கு படிபூஜை நடக்கும். இன்று காலை 10:00 மணிக்கு சபரிமலையில் இன்று காலை நடைபெற்ற குலுக்கல் தேர்வில் சபரிமலை மேல்சாந்தியாக மாவேலிக்கரை என் பரமேஸ்வரன் நம்பூதிரி மாளிகைப்புறம் மேல்சாந்தியாக கோழிக்கோடு சம்பு நம்பூதிரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் ஒரு ஆண்டுகாலம் சபரி மலையில் தங்கி பூஜை செய்வார்கள். பம்பையில் வெள்ளம்ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு இன்று காலை முதல் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக கேரளாவில் பெய்து வரும் கன மழையால் பம்பையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மழை தொடரும் பட்சத்தில் வெள்ளம் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்றும், நாளையும் நிலக்கல்லில் இருந்து பக்தர்கள் சபரிமலை செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் முன்பதிவு செய்தவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.