Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொடைக்கானல் மலைப்பகுதியில் ... ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு ஜேஷ்டாபிஷேகம்: தங்க குடத்தில் புனித நீர் ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஐப்பசி பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு: மேல்சாந்தி தேர்வு
எழுத்தின் அளவு:
ஐப்பசி பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு: மேல்சாந்தி தேர்வு

பதிவு செய்த நாள்

17 அக்
2021
08:10

 சபரிமலை: ஐப்பசி மாத பூஜைகளுக்காக, சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பபட்டது. இன்று புதிய மேல்சாந்தி தேர்வு நடக்கிறது.கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஐப்பசி மாத பூஜைகளுக்காக நேற்று நடை திறக்கப்பட்டது. மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடை திறந்து விளக்கேற்றினார். வேறு பூஜைகள் கிடையாது. இரவு 9:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. இன்று அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும் அபிஷேகம், நெய்யபிஷேகம், கணபதி ஹோமம் நடக்கும். அக்., 21 வரை பூஜைகள் நடைபெறும்.

தினமும் இரவு 7:00 மணிக்கு படிபூஜை நடக்கும். இன்று காலை 10:00 மணிக்கு சபரிமலையில் இன்று காலை நடைபெற்ற குலுக்கல் தேர்வில் சபரிமலை மேல்சாந்தியாக மாவேலிக்கரை என் பரமேஸ்வரன் நம்பூதிரி மாளிகைப்புறம் மேல்சாந்தியாக கோழிக்கோடு சம்பு நம்பூதிரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் ஒரு ஆண்டுகாலம் சபரி மலையில் தங்கி பூஜை செய்வார்கள். பம்பையில் வெள்ளம்ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு இன்று காலை முதல் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக கேரளாவில் பெய்து வரும் கன மழையால் பம்பையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மழை தொடரும் பட்சத்தில் வெள்ளம் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்றும், நாளையும் நிலக்கல்லில் இருந்து பக்தர்கள் சபரிமலை செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் முன்பதிவு செய்தவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆடி மாதம் அம்மனுக்குரிய மாதமாகப் போற்றப்படுகிறது. ஆடிச் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சில ... மேலும்
 
temple news
திருப்பதி;  திங்கள்கிழமை திருமலையில் பல்லவோத்ஸவம் கொண்டாடப்பட்டது. மைசூர் மகாராஜாவின் பிறந்தநாளை ... மேலும்
 
temple news
பண்ருட்டி; திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் திருபவித்ர உற்சவத்தில் உற்சவர் பெருமாள், ஸ்ரீதேவி, ... மேலும்
 
temple news
தாலி பாக்கியத்திற்காக சுமங்கலிகள் ஆடிமாதத்தில் மேற்கொள்வது அவ்வையார் நோன்பு. ஆடி செவ்வாயன்று ... மேலும்
 
temple news
கோபால்பட்டி; சாணார்பட்டி அருகே வி.மேட்டுப்பட்டி கதிர் நரசிங்க பெருமாள் கோயிலில் ஆடி மாத ஏகாதசி பூஜை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar