புதுச்சேரி : சின்ன சுப்ராயப் பிள்ளை வீதி அங்காளம்மன் கோவிலில் தீபாவளி நோன்பு, அமாவாசை நோன்பு விரத தேதிகள் மற்றும் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.தீபாவளி பண்டிகை, நவ. 4ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
பண்டிகையையொட்டி, நோன்பு வழிபாடு செய்வர். நோன்பு வழிபாட்டுக்கான அதிரசம் தயாரிக்க புதிய விறகு அடுப்பு, மண்சட்டியை புதிதாக வாங்கி பயன்படுத்துவர். அதிரசம் தயாரித்து, அருகில் உள்ள கோவிலுக்கு சென்று வழிபடுவர். அதன் பிறகு வீட்டில் படையலிடுவர்.தீபாவளி நோன்பு வழிபாட்டுக்கான நேரம் குறித்து, புதுச்சேரி சின்ன சுப்ராயப்பிள்ளை வீதியில் உள்ள அங்காளம்மன் கோவில் செயல் அதிகாரி ஜனார்த்தனன் கூறி உள்ளதாவது:தீபாவளி நோன்பு வழிபாட்டினை, நவ.3ம் தேதி காலை 7.30 மணி முதல் இரவு 9.30 மணி வரையிலும், மறுநாள் 4ம் தேதி காலை 6:00 மணி முதல் 8:00 மணி வரை மேற்கொள்ளலாம்.அமாவாசை நோன்பினை, 4ம் தேதி காலை 8.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை எடுக்கலாம். இதற்கான ஏற்பாடுகள் அங்காளம்மன் கோவிலில் செய்யப்பட்டு வருகிறது .இவ்வாறு அவர் கூறி உள்ளார்.