Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில் ... எல்லோரும் கொண்டாடுவோம் - இன்று மிலாடிநபி எல்லோரும் கொண்டாடுவோம் - இன்று ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மயிலாடுதுறையில் துலா உற்சவம்: தீர்த்தவாரியுடன் தொடங்கியது
எழுத்தின் அளவு:
மயிலாடுதுறையில் துலா உற்சவம்: தீர்த்தவாரியுடன் தொடங்கியது

பதிவு செய்த நாள்

19 அக்
2021
09:10

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் துலா உற்சவம் முதள்நாள் தீர்த்தவாரியுடன் நேற்று தொடங்கியது.

சிவபெருமானிடம் சாபம் பெற்ற பார்வதி தேவியார் சாப விமோசனம் பெற மயில் உருவம் கொண்டு பூஜித்த இடம் மயிலாடுதுறை. சிவபெருமானும் மயில் உருகொண்டு இருவரு ம் ஆனந்த நடனம், மாயூர தாண்டவம் ஆடினர். பின்னர் சிவமயில் தேவி மயிலை நோக்கி பிரம்மா ஸ்தாபித்த இந்த பிர்மதீர்த்தத்தில் மூழ்கி சிவலிங்கத்தை பூஜிப்பாயாக என்;று அசரீரி கூறியது. அதைக்கேட்ட பார்வதி தேவி மனமகிழ்ச்சியுடன் பிர்ம்ம தீர்த்தத்தில் மூழ்கியெழுந்து மயில் உரு நீங்கி தேவியாக சுய உருப்பெற்றார். சிவமயிலும் சிவபிரானாக மாறி என்ன வரம் வேண்டும் தேவி என்றார். அப்போது அம்மை கவுரியாகிய நான் மயில் உருக்கொண்டு பூஜித்ததால் கவுரிமாயூரம் என்ற பெயர் இந்த ஊருக்கு வர வேண்டும். நீங்களும் மாயூரநாதர் என்று அழைக்கப்பட வேண்டும்.

நான் உங்களை வழிபட்ட இந்த துலா மாதத்தில் இங்கு வந்து நீராடி பாவ விமோச்சனம் பெற்றது போல் மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் துலாமாதத்தில் நீராடுபவர்களுக்கு பாவங்களை போக்கி அருள்பாலிக்க வேண்டும் என்றார் வேண்டினார் என்பது ஐதீகம். அதனால் கங்கை முதலான பு ண்ணிய நதிகள் காவிரி துலாக்கட்டத்தில் ஐப்பசி மாதத்தில் வந்து நீராடி தங்கள் பாவங்களை போக்கிகொண்டதாக ஐதீகம். இதனை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் 30 நாட்களும் சுவாமி தீர்த்தம் கொடுக்கும் நகிழ்ச்சி நடைபெறும். அதே போல் இவ்வாண்டு நேற்று 18ம் தேதி துலா உற்சவ தொடக்க தீர்த்தவாரி நேற்று நடந்தது. தீர்த்தவாரி உற்சவத்திற்கு திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான அபயாம்பிகை சமேத மாயூரநாதர் சுவாமி. அறம்வளர்த்த நாயகி சமேத அய்யாறப்பர் சுவாமி, தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஞானாம்பிகை சமேத வதானேஸ்வரர், விசாலாட்சி சமேத காசிவிஸ்வநாதர் ஆகிய சுவாமிகள் பஞ்சமூர்த்திகளுடன் காவிரியின் இருகரைகளிலும் எழு ந்தருளின மதியம் 2 மணியளவில் திருவாவடுதுறை ஆதீனம் கட்டளை விசாரணை அம்பலவாண தம்பிரான் சுவாமிகள், தருமபுரம் ஆதீனம் கட்டளை விசாரணை சிவகுருநாத த ம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் காவிரியின் இருகரைகளிலும் அஸ்திர தேவர்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு சுவாமி தீர்த்தம் கொடுக்க காவிரியில் திரளான பக்தர்கள் புனித நீராடினர். இதில் சிவபுரம் வேத சிவாகம பாடசாலை நிறுவனர் சாமிநாதசிவாச்சாரியார், புஷ்கரம் கமிட்டி ஒருங்கிணைப்பாளர் மகாலட்சுமி உட்பட திர ளான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதில் முக்கிய விழாவாக வரும் நவம்பர் 4ம் தேதி அமாவாசை தீர்த்தவாரியும், 7ம் தேதி திருக்கொடியேற்றமும், 13ம் தேதி திருக்கல்யாணம், 15ம் தேதி திருத் தேரோட்டமும், நவம்பர் 16ம் தேதி கடைமுக தீர்த்தவாரியும் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி ; அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமியில் வசந்த பஞ்சமியை முன்னிட்டு, பிரபு ஸ்ரீ ராமலல்லா ... மேலும்
 
temple news
எல்லா தெய்வங்களுக்கும் ஜெயந்தி தினம் கொண்டாடும் ஆன்மிகர்கள், சூரியனுக்கும் ஒரு ஜெயந்தி தினத்தைக் ... மேலும்
 
temple news
கோவை: தை மாதம் சஷ்டி விரதத்தை முன்னிட்டு கோவை காட்டூர் ரங்க கோனார் வீதியில் இருக்கும் அருள்மிகு ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் பாதையை மறித்து நெய் விளக்கு ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு தேர் கட்டும் பணி தீவிரம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar