பதிவு செய்த நாள்
19
அக்
2021
09:10
சென்னை : ஷீரடிக்கு குரு க்ருபா யாத்திரை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் மதுரையில் இருந்து டிச., 1ம் தேதி புறப்படும்.
திண்டுக்கல், திருச்சி, அரியலுார், விருத்தாசலம், விழுப்புரம், சென்னை - எழும்பூர் வழியாக மஹாராஷ்டிரா மாநிலம் செல்லும். அங்கு ஷீரடி சாய்பாபா, பண்டரிபுரம் பாண்டுரங்கா, சிங்கனாப்பூர் சுயம்பு சனீஸ்வரர் கோவில்களுக்கு செல்லலாம். ஆந்திராவில் மந்த்ராலயம் சென்று வரலாம். ஏழு நாட்கள் சுற்றுலாவுக்கு ஒருவருக்கு, 7,060 ரூபாய் கட்டணம். கொரோனா பாதிப்பின்றி சுகாதார வழிகாட்டு நெறிமுறைகளோடு, யாத்திரை ரயில் இயக்கப்படுவதால், பயணியர் கண்டிப்பாக இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். மாநில, மத்திய அரசு ஊழியர்களுக்கு கட்டண சலுகை உண்டு.மேலும் தகவலுக்கு, ஐ.ஆர்.சி.டி.சி.,யின் சென்னை அலுவலகத்தை 90031 40680, மதுரை 82879 31977, திருச்சி 82879 31974 ஆகிய மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம். irctctourism.com என்ற இணையதள முகவரியிலும் தெரிந்து கொள்ளலாம்.