காங்கேயம்: காங்கேயம் அருகே உள்ள சின்னாரிபட்டி கம்பம் மாதேசிலிங்கம் கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி அன்னாபிஷேகம் நடந்தது.
ஐப்பசி மாதம் பவுர்மணி நாளில் சிவபெருமான் வீற்றிருக்கும் கோவில்களில் அன்னாபிஷேகம் நடைபெறும். சிவபெருமானால் படைக்ககூடிய அனைத்து ஜீவராசிகளுக்கும் உணவு அளிக்கக்கூடிய நாளாக ஐப்பசி மாத பவுர்ணமி நாள் அமைகிறது. ஆகவே சிவபெருமான் எழுந்தருளும் அனைத்து கோவில்களிலும் ஆண்டுதோறும் அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். காங்கேயம் அருகே உள்ள சின்னாரிபட்டியில் 2000 ஆண்டுகள் மிகவும் பழமை வாய்ந்த மாதேசிலிங்கம் கோவில் உள்ளது. இங்கு முருகர், விநாயகர், ஈஸ்வரர், அம்பாள் ஆகிய ஸ்வாமி உள்ளது. இதில் நேற்று காலை 11:00 மணிக்கு, மங்களாம்பிகை சமேத மாதவீஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் மற்றும் அன்னாபிஷேகம் நடைபெற்றது. 20 கிலோ சதத்தைக் கொண்டும், காய்கறி பழங்கள் கொண்டும் அபிஷேகம் நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதியில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டனர்.