திருப்புத்துார்: திருப்புத்தூர் அருகே கண்டரமாணிக்கம் பகுதி விருசுழி நடுவாற்றில் மருதம்பிள்ளையார் கோயிலில் ஐப்பசி பெளர்ணமி மற்றும் அன்னாபிஷேகத்தை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது.
இக்கோயிலுக்கு அண்மையில் கும்பாபிஷேகம் நடந்தது. ஐப்பசி பெளர்ணமி மற்றும் அன்னாபிஷேகத்தை முன்னிட்டு இக்கோயிலில் எழுந்தருளியுள்ள மருதம்பிள்ளையார், வனதுர்க்கை, மருதுசாமி, பாலமுருகன், சைவ முனீஸ்வரர் ஆகியோருக்கு திரவிய அபிஷேகம் நடந்து தொடர்ந்து காய்கறி,அன்னாபிஷேகம் நடந்தது. பின்னர் ராமு சிவாச்சார்யர் தலைமையில் 108 விளக்குகளுடன் திருவிளக்கு பூஜை நடந்தது. சுற்று வட்டாரக் கிராம பெண்கள் பங்கேற்றனர். ஏற்பாட்டினை என்.பத்மனாபன், அழ.மணிகண்டன் ,ராம.கனகுகருப்பையா செய்தனர்.