Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மருதம் பிள்ளையார் கோயிலில் ... திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குருந்தமலை கோவிலில் குப்பைகள் அகற்றல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 அக்
2021
05:10

மேட்டுப்பாளையம்: குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோவில் மற்றும் மலைப் பகுதியில் உள்ள குப்பைகளை, கராத்தே மாணவர்கள் அகற்றினர்.

சிறுமுகை மட்சுசிமா கராத்தே பள்ளியில், ஏராளமான மாணவர்கள் கராத்தே கலைகளை கற்று வருகின்றனர். இந்த மாணவர்களுக்கு கராத்தே கலையுடன், சமூக சேவையில் ஈடுபடுவது குறித்த பயிற்சியும் அளிக்கப்படுகிறது. கராத்தே பள்ளியின் தலைமை பயிற்சியாளர் அருள்மொழி, பயிற்றுனர் மற்றும், 52 கராத்தே மாணவர்களை அழைத்துக்கொண்டு, காரமடை அடுத்த குருந்தமலைக்கு சென்றார். அங்கு குருந்தமலை பகுதியிலும், குழந்தை வேலாயுத சுவாமி கோவில் பகுதியிலும், கிடந்த பிளாஸ்டிக் டம்ளர், மது பாட்டில்கள், கண்ணாடி பாட்டில்கள், குப்பைகள் ஆகியவற்றை சுத்தம் செய்தனர். மலையைச் சுற்றி ஒரு மணிநேரத்தில், 26 மூட்டைகள் பிளாஸ்டிக் கழிவு பொருட்களை சேகரித்தனர்.

இதுகுறித்து கராத்தே பயிற்சியாளர் அருள்மொழி பேசுகையில், தடை செய்த பிளாஸ்டிக் பொருட்களை, பயன்படுத்தக்கூடாது என, உங்கள் பெற்றோர்களும் எடுத்துச்சொல்ல வேண்டும். இதனால் சுற்றுப்புற சூழல் மாசுபடுவது தடுக்கப்படும், என்றார். மேலும், கோவிலுக்கு வந்த பக்தர்கள் மத்தியில், பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று, விழிப்புணர்வையும் மாணவர்கள் ஏற்படுத்தினர். நிகழ்ச்சி முடிவில் கராத்தே மாணவர்கள் அனைவரும், பிளாஸ்டிக் பயன்படுத்த மாட்டோம் என, உறுதி மொழி ஏற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பூட்டான்; பூட்டான், திம்புவில் உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழா நடக்கிறது. விழாவில் சாங்லிமிதாங் ... மேலும்
 
temple news
சிவனின் சக்திகளில் ஒன்றான பைரவர் பிறந்த தினமே காலபைரவாஷ்டமி. இந்நாளில் அஷ்ட லட்சுமியரும் பைரவரை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்:  திருக்கல்யாண உத்சவம் நிறைவு நாளான நேற்று காஞ்சிபுரம் பாலதர்ம சாஸ்தா மலர் ... மேலும்
 
temple news
திருப்பதி: ஆன்மிக எழுத்தாளரும், சொற்பொழிவாளருமான பி.சுவாமிநாதன் தமிழில் எழுதிய, ‘மகா பெரியவா’ ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்; ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயில் மலை அடிவாரத்தில் வீர விநாயகர் மற்றும் பால ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar