திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22அக் 2021 09:10
உடுமலை: திருமூர்த்தி மலையில் பெய்த கன மழை காரணமாக, அமணலிங்கேஸ்வரர் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது.
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே திருமூர்த்தி மலைப் பகுதியில், நேற்று கன மழை பெய்தது. காட்டாறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, மலை மீதுள்ள பஞ்சலிங்கம் அருவியில் நீர் ஆர்ப்பரித்து கொட்டியது. பாலாற்றின் கரையில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலை, நேற்று மாலை 4:00 மணிக்கு வெள்ளம் சூழ்ந்தது.
கோவில் கருவறை மற்றும் வளாகத்தில் உள்ள உண்டியல்களில் நீர் புகாமல் இருக்க, கோவில் பணியாளர்கள் உடனடி நடவடிக்கை எடுத்தனர்.கோவிலுக்கு வந்த பக்தர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். அருவிக்கு செல்ல யாரையும் அனுமதிக்கவில்லை. குமரியில் மீண்டும் மழைகன்னியாகுமரி மாவட்டத்தில் 15-ம் தேதி முதல், மூன்று நாட்கள் இடைவிடாது பெய்த கன மழையால் மேற்கு பகுதியில் பல கிராமங்கள் தண்ணிரில் தத்தளித்தன.
ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் தண்ணீரில் மூழ்கின.கடந்த மூன்று நாட்களாகவெயில் அடித்து வந்த நிலையில் நேற்று மதியத்துக்கு பின், மீண்டும் மழை துவங்கியது. தொடர்ந்து வானம் மேக மூட்டத்துடன் இருந்தது. நாகர்கோவில் -- திருவனந்தபுரம் ரயில் பாதையில் தெங்கன்குழி அருகே லேசான மண் சரிவு ஏற்பட்டது. அந்த தடத்தில்,ரயில்கள் அனைத்தும் குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டன.