திருப்பூர்: மண்ணரை, சத்யா காலனியிலுள்ள ஸ்ரீ பாலமரத்து கருப்பராய சுவாமி கோவிலில், கும்பாபிஷேக ஆண்டு விழா நடந்தது. கோவிலிலுள்ள ஸ்ரீ கன்னிமார், ஸ்ரீ கருப்பராய சுவாமிக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து பவுர்ணமி பூஜை வழிபாடுகளும் நடந்தன. விழாவையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சிறப்பு வழிபாட்டில் மண்ணரை, சத்யா காலனியை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று கருப்பராய சுவாமியை வழிபட்டனர்.