பதிவு செய்த நாள்
22
அக்
2021
12:10
ராய்ச்சூர்: ராய்ச்சூர் அருகே உள்ள இடபனுார் கிராமத்தின் ஆஞ்நேயர் கோவில் அருகில் நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வரிசையாக வைக்கப்பட்டு நடுகற்களில் முதல் கல்லில் வேட்டையை சித்தரிக்கும் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இது, 7.5 அடி அகலம், 3.5 அடி உயரம் உள்ளது. இந்த நடுகல்லில் வீரன் ஒருவன் அலங்காரம் செய்யப்பட்ட குதிரையில்
வேட்டையில் ஈடுபட்டுள்ளார். ஒரு கையில் ஈட்டி, மறு கையில் சிறு வாள் உள்ளது. குதிரையின் முன் சேவகன் ஒருவன், ஒரு கையில் குதிரையின் லகானையும், மறு கையில் தோல் பையில் தண்ணீரையும் பிடித்துள்ளான். வீரனை சுற்றிலும் பாம்பு, ஆமை , கிளி, நாய் சிற்பங்கள் வரையப்பட்டுள்ளது. சூரியன், சந்திரன் சிற்பமும் உள்ளது. இது, 17ம் நுாற்றாண்டை சேர்ந்தது; அன்றைய வேட்டை முறையை சித்தரிக்கிறது. பல்லாரி விஜயநகர ஸ்ரீகிருஷ்ண தேவராய பல்கலை கொப்பால் முதுகலை மையத்தின் வரலாறு மற்றும் தொல்லியல் பிரிவு பேராசிரியை கீதா பாட்டீல், இதை கண்டுபிடித்துள்ளார்.