பதிவு செய்த நாள்
22
அக்
2021
12:10
கோவில்பட்டி: கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணத்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. கொடியே
ற்றத்தை முன்னிட்டு, கோயில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து , திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜைகள் நடந்தன.
காலை 7.30 மணிக்கு மேல் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட கொடிமரத்திற்கு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடந்தது. தொடர்ந்து, சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடை பெற்றன. இதையடுத்து, ஐப்பசி திருக்கல்யாணத்திருவிழா கொடியேற்றப்பட்டது. நிகழ்ச்சியில், கோயில் முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினர் திருப்பதிராஜா, த.மா.கா ., நகர தலைவர் ராஜகோபால், கம்மவார் மகளிர் மேல்நிலைப் பள்ளி நிர்வாகக்குழு உறுப்பினர் ஆழ்வார்சாமி, சைவ வேளாளர் சங்கத்தலைவர் தெய்வேந்திரன், கோயில் நிர்வாக அலுவலர் நாகராஜன் மற்றும் மண்டகப்படிதாரர்கள் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு 7 மணிக்கு புஷ்பசப்பரத்தில் வெளிபிரகாரத்தில் அம்மன் திருவீதியுலா நடந்தது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் அமலில் இருப்பதால் , இந்த ஆண்டு ஐப்பசி திருக்கல்யாணத்திருவிழா தேரோட்டம் நடைபெறாது. 9ம் திருநாளான 29ம் தேதி சுவாமி அம்பாள் திருவீதியுலா கோயில் வெ ளிப்பிரகாரத்தில் வலம் வரும். 12ம் திருநாளான நவம்பர் 1ம் தேதி கோயில் மண்டபத்தில், அரசு விதிமுறைகளின்படி திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறும்.