திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை கொடியேற்றம் நடந்தது. கொடியேற்றத்தை முன்னிட்டு சுவாமி, அம்பாளுக்கு அபிஷேக அலங்கார தீபாராதனை, கொடிமரத்திற்கு அபிஷேகம் நடந்தது. அம்பாள் சன்னதி கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு, சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். விழாவின் தினமும் சுவாமி, அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. 9ம் திருவிழாவான நவ.1ம் தேதி கம்பைநதி காமாட்சி அம்மன் கோயில் காட்சி மண்டபத்தில் காந்திமதி அம்பாளுக்கு, சுவாமி நெல்லையப்பர் காட்சி அளிக்கும் வைபவம் மதியம்12 மணி முதல் ஒரு மணி வரை நடக்கிறது. 2ம் தேதி ஆயிரங்கால் மண்டபத்தில் வைத்து அதிகாலை 4 மணி முதல் 5மணிக்குள் சுவாமி, அம்பாள் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. இதைத் தொடர்ந்து மறுவீடு பட்டணப்பிரவேசம், ௩ நாட்கள் ஊஞ்சல் வைபவம் நடக்கிறது. ஏற்பாடுகளை நெல்லையப்பர் கோயில் நிர்வாகம் செய்துள்ளது.