உசிலம்பட்டி: உசிலம்பட்டி பெரியசெம்மேட்டுப்பட்டியில் செல்வவிநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. யாகசாலை பூஜைகளுக்குப்பின் கோபுர கலசத்திற்கு மகாகும்பாபிஷேகம், விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. சீமானூத்து ஊராட்சித் தலைவர் அஜித்பாண்டி, முன்னாள் உசிலம்பட்டி ஒன்றியக் குழு தலைவர் தங்கப்பாண்டியன் மற்றும் சுற்று கிராம மக்கள் கலந்து கொண்டனர். வேப்பனூத்து ஊராட்சி ஒத்தப்பாறைப்பட்டி சீலக்காரி அம்மன் கோயிலில் புதிய சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. உசிலம்பட்டி எம்.எல்.ஏ., அய்யப்பன், ஊராட்சித் தலைவர் முத்துராமன் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.