பதிவு செய்த நாள்
23
அக்
2021
10:10
சென்னை:ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் உள்ள கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகளுக்கு மாத ஊக்கத் தொகையாக, 1,000 ரூபாய் வழங்கப்படும் என, சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. இத்திட்டம், கடந்த மாதம் முதல்வரால் துவக்கி வைக்கப்பட்டது. இதில் 9,860 பயனாளர்களின் விபரம் அறநிலையத் துறை இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.இப்பட்டியலில் விடுபட்டவர்கள், அறநிலையத் துறை தலைமை அலுவலகத்தில் இயங்கி வரும், 044 - 2833 9999 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு, தங்களது பெயர், முகவரி, அலைபேசி எண் மற்றும் தாங்கள் பணிபுரியும் கோவில் பெயர் உள்ளிட்ட விபரங்களை தெரிவிக்கலாம். விபரங்கள் சரிபார்க்கப்பட்டு, விடுபட்ட பெயர்களை பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என, அறநிலையத் துறை அறிவித்துள்ளது.