ஆண்டிபட்டி : மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக தெப்பம்பட்டி மாவூற்று வேலப்பர் கோயில் மலைப்பகுதி உள்ளது.வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இப்பகுதி சமீபத்தில் பெய்த மழையால் பசுமையாக உள்ளது. மாதாந்திர கார்த்திகை, அமாவாசை, பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து செல்கின்றனர். மலைப்பகுதியில் உள்ள மரம், செடி கொடிகள் மழையால் செழித்து வளர்ந்துள்ளன. வேலப்பர் கோயிலுக்கு வரும் வெளியூர் பக்தர்கள் பசுமை படர்ந்துள்ள இப்பகுதியில் நிலவும் குளுமையான சூழலை ரசித்து செல்கின்றனர்.