சபரிமலையில் ஐப்பசி மாத பூஜை அக்.,17 முதல் 21 வரை நடந்தது. இங்கு கனமழையால் பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. முன்பதிவு செய்திருந்த பக்தர்கள் நிலக்கல் வரை வந்து விட்டு திரும்பி சென்றனர். இந்நிலையில் சித்திரை ஆட்ட திருநாள் பூஜைக்காக நவ., 2 மாலை நடை திறக்கிறது. மறுநாள் அதிகாலை 5:00 மணி முதல், இரவு 10:00 மணி வரை பூஜைகள் நடைபெறும். இதையடுத்து, ஐப்பசி மாத பூஜையில் தரிசனத்திற்கு முன்பதிவு செய்திருந்தவர்கள் நவ.3ல் தரிசனம் செய்யலாம் என தேவசம்போர்டு அறிவித்துள்ளது. ஏற்கனவே முன்பதிவு செய்த கூப்பன், இரண்டு தடுப்பூசி அல்லது ஆர்.டி.பி.சி.ஆர். நெகட்டிவ் சான்றிதழுடன் பக்தர்கள் வரவேண்டும். நவ. 3ல் நடை அடைக்கப்பட்ட பின் மண்டலகால பூஜைகளுக்காக நவ.15 மாலையில் நடை திறக்கப்படுகிறது. நவ.16-ல் மண்டலகாலம் ஆரம்பமாகிறது.