திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் நேற்று(27 ம்தேதி) காலை கருட மண்டபம் பகுதியில் கோயில் இணை ஆணையர் செ. மாரிமுத்து முன்னிலையிலும் , கோயில் உதவி ஆணையர் கு. கந்தசாமி , புதுக்கோட்டை மாவட்ட உதவி ஆணையர் நா.சுரேஷ் அவர்களின் மேற்பார்வையிலும் மாதாந்திர உண்டியல் திறக்கப்பட்டு பக்தர்களின் காணிக்கைகள் எண்ணப்பட்டது. இதில் ரூ.95 லட்சம் இருந்தது. உண்டியல் எண்ணும் பணியில் கோயில் பணியாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்ட்டர்கள் ஈடுபட்டனர்.