ராமேஸ்வரம் : தனுஷ்கோடி கடற்கரையில் சேதமடைந்த சிவலிங்கம், நந்தி சிலையை யாரோ வைத்து சென்று உள்ளனர். தனுஷ்கோடி கம்பிபாடு, அரிச்சல்முனை இடையே கடற்கரையில் கருங்கல்லில் செய்த 2 அடி உயர சிவலிங்கம், 3 அடி நீள நந்தி சிலை கிடந்தது.இரு சிலைகளும் சேதமடைந்து இருந்தது, தனுஷ்கோடி போலீசார் விசாரித்தனர்.