மேலுார் : மேலுார் அருகே நாவினிபட்டியில் மங்கள சித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.இதை முன்னிட்டு அக்., 25ல் யாகசாலை பூஜை துவங்கியது. மூன்றாம் நாள் யாகசாலை பூஜை முடிந்து சிவாச்சார்யார் தட்சிணாமூர்த்தி கும்பத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினார். அ. வல்லாளபட்டி, ஏரியூர், அட்டபட்டி உள்ளிட்ட ஏழு கிராமத்தினர் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது.