திருச்செங்கோடு: திருச்செங்கோடு அருகே ஆண்டிபாளையத்தில் மாரியம்மன் கோவில் மற்றும் முனியப்பன் கோவில் உள்ளது. இந்த பகுதியை சேர்ந்த இரு பிரிவினரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த, 10ஆண்டுகளாக கோவில் பூட்டப்பட்டு கோவில் சாவி ஆர்.டி.ஓ., வசம் இருந்தது. பூஜை, பண்டிகைகளும் நடைபெறாமல் இருந்தன. இந்நிலையில் எம்.எல்.ஏ., ஈஸ்வரன் தலைமையில் இரு தரப்பு பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்பட்டது. தொடர்ந்து ஆர்.டி.ஓ., இளவரசி முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. கோவில் திறக்கப்பட்டு முதலில் விநாயகருக்கு பூஜை செய்து கிராமத்தினர் மகிழ்ச்சியடைந்தனர்.