அனுமன்தீர்த்தம் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவிலில் ரூ.2 லட்சம் காணிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28அக் 2021 05:10
ஊத்தங்கரை: ஊத்தங்கரை அடுத்த, அனுமன் தீர்த்தம் ஆஞ்சநேயர் கோவிலுக்கு நாள்தோறும், 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கைகள் ஆண்டிற்கு நான்கு முறை எண்ணப்படுகிறது. கொரோனா தாக்கத்தால் கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்காததால் தற்போது ஆண்டுக்கு இருமுறை மட்டுமே உண்டியல் எண்ணப்படுகிறது. இந்நிலையில், உண்டியலில் இருந்த காணிக்கை எண்ணும் பணி, ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் நேற்று பிற்பகல், 1:00 மணிக்கு தொடங்கி, 4:00 மணி வரை நடந்தது. இதில் மொத்தம், இரண்டு லட்சத்து, 2,210 ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.