Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சுவாமி சிலைகள் தொடர்ந்து உடைப்பு: ... வைகை ஆற்றில் மீனாட்சி அம்மன் சிலை கண்டெடுப்பு வைகை ஆற்றில் மீனாட்சி அம்மன் சிலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஊஞ்சல் உற்சவம்
எழுத்தின் அளவு:
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஊஞ்சல் உற்சவம்

பதிவு செய்த நாள்

29 அக்
2021
06:10

திருச்சி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில்  ஆண்டு தோறும் ஸ்ரீ நம்பெருமாள் ஊஞ்சல் உற்சவம்  9 நாட்கள் கொண்டாடப்படும். அதே போல, இந்தாண்டு ஊஞ்சல் உற்சவம் கடந்த 24.10.2021  தொடங்கியது. இந்த விழா வருகிற 1-ந் தேதி வரை நடைபெறுகிறது. ஊஞ்சல் உற்சவத்தின் போது ஸ்ரீ நம்பெருமாள் உபயநாச்சிமார்களுடன்  மூலஸ்தானத்தில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு ஊஞ்சல் மண்டபத்திற்கு எதிரில் உள்ள நாலுகால் மண்டபத்தில் திருவந்திக்காப்பு கண்டருளிய பின் ஊஞ்சல் மண்டபத்திற்கு மாலை 5.30 மணிக்கு வந்டைவார்.

அதன் பின் இரவு 7.15 மணிக்கு ஸ்ரீநம்பெருமாள் ஊஞ்சலில் எழுந்தருளியதும் மங்கள ஆர்த்தி கண்டருள்வார். இந்த நிகழ்ச்சி இரவு 8.15 மணி வரை நடைபெறும். அப்போது ஸ்ரீநம்பெருமாள் உபயநாச்சிமார்களுடன் ஊஞ்சல் ஆடியவாறு பக்தர்களுக்கு காட்சியளிப்பார். பின்னர் ஊஞ்சல் மண்டபத்தில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

நெல்லளவு கண்டருளல் : இதேபோல் 2ம் திருநாள் முதல் 6ம் திருநாள் மற்றும் 8ம் திருநாள் வரை தினமும் இரவு 7.15  மணி  முதல்  இருவு 8.15 மணி வரை ஸ்ரீநம்பெருமாள் உஞ்சலாடும் நிகழ்ச்சி நடை பெறுகிறது.   விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 7-ம் நாள் ஸ்ரீநம்பெருமாள் உபயநாச்சியார்களுடன்  மூலஸ்தானத்திலிருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு கொட்டார வாசலில் நெல்லளவு கண்டருளிய பின்னர் மாலை 6.45 மணிக்கு தாயார் சன்னிதியில் திருவந்திக்காப்பு கண்டருள்கிறார். அங்கிருந்து புறப்பட்டு இரவு 7.15 மணிக்கு ஊஞ்சல் மண்டபம் வந்தடைகிறார். அதன் பின் ஊஞ்சல் மண்டபத்தில் இரவு 8.15 மணி முதல் இரவு 9.15 மணி வரை ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது. பின்னர் அங்கிருந்து இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு இரவு 10.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.  தீர்த்தவாரி : விழாவின் நிறைவு நாளான 9-ம் நாள் (நவம்பர்1ம் தேதி)  ஸ்ரீ நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து காலை 9.15 மணிக்கு புறப்பட்டு காலை 10.15 மணிக்கு ஊஞ்சல் மண்டபம்  சென்றடைகிறார். அங்கு காலை 11.30 மணி முதல் மதியம்  1.30 மணி வரை திருமஞ்சனம் கண்டருளுகிறார். மாலை 6 மணி முதல் இரவு ஊஞ்சல் உற்சவம் கண்டருளுகிறார். பின்னர் ஊஞ்சல் மண்டபத்தில் இருந்து இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு படிப்பு கண்டருளி இரவு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். அத்துடன் ஊஞ்சல் ஊற்சவ விழா நிறைவடைகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
முருகப்பெருமான் செவ்வாய்க்குரியவர். இவருக்கு செவ்வரளி மாலை சூட்டி வழிபட சொந்தவீடு அமையும். இவரை ... மேலும்
 
temple news
கன்னியாகுமரி ; திருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக கன்னியாகுமரி பத்மநாபபுரம் ... மேலும்
 
temple news
கோவை ; கோவை, நேரு ஸ்டேடியம் ஆடிஸ்வீதி தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோவிலில் புரட்டாசி மாதம் மூன்றாவது ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு; சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழா அக்., 3ல் ஆனந்தவல்லி ... மேலும்
 
temple news
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவிலில் நவராத்திரியை பெருவிழாவை முன்னிட்டு, சக்தி கொலுவுடன் பத்து நாள் விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar