திருக்குறுங்குடி கோயிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29அக் 2021 06:10
திருக்குறுங்குடி: திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடை பெற்றது. 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான, அழகிய நம்பிராயர் பெருமாள் கோயிலில் கால பைரவரருக்கு தனியாக சன்னிதி உள்ளது. மாதம் தோறும் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு இங்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கமாகும். நேற்று, தேய்பிறை அஷ்டமியன்று நடைபெற்ற சிறப்பு பூஜையில் பக்தர்கள் கலந்து கொண்டு கால பைரவரை தரிசித்தனர். ஏராளமான பெண்கள் நெய் விளக்கேற்றி நீராஞ்சனம் வழிபாடு செய்தனர்.