நத்தம்: நத்தம் கைலாசநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்கு அபிஷேக ஆராதனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதேபோல், நத்தம், சாணார்பட்டி ஒன்றியம் அய்யாபட்டி சிவ தாண்டவ பாறை ருத்ர லிங்கேஸ்வரர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு அலங்காரங்கள் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் தரிசனம் செய்தனர்.