காரைக்கால்: திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில் நிர்வாக அதிகாரியாக அருணகிரிநாதன் பொறுப்பெற்றுக் கொண்டார்.காரைக்கால் திருநள்ளாறு பிரசித்தி பெற்ற சனீஸ்வர பகவான் கோவிலில் கடந்த சிலமாதங்களாக கோவில் நிர்வாக அதிகாரி பணியிடம் காலியாக இருந்தது. இந்நிலையில், கல்வித் துறை கண்காணிப்பாளராக பணியாற்றிய அருணகிரிநாதன், திருநள்ளாறு கோவில் நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.நிர்வாக அதிகாரியாக பதவி ஏற்றுக் கொண்ட அவருக்கு, கைலாசநாதர் கோவிலில் அறங்காவலர் குழு தலைவர் கேசவன், துணைத் தலைவர் பக்கிரிசாமி, பொருளாளர் ரஞ்சன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.