தாடிக்கொம்பு : தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.
தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் சொர்ண ஆகர்ஷன பைரவருக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. கொரோனா கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஏராளமானோர் வந்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதே போல், திண்டுக்கல் அபிராமியம்மன், ரயிலடி சித்தி விநாயகர் கோயிலில் பைரவருக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் சாமி தரிசனம் செய்தனர்.