Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
600 ஆண்டு பழமையான அடுக்குநிலை ... விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் ஐப்பசி வெள்ளி பூஜை விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவிலுக்குள் பிறந்தநாள் கொண்டாட்டம்.. கேக் வெட்டிய காங் முன்னாள் தலைவர் மணியால் சர்ச்சை
எழுத்தின் அளவு:
கோவிலுக்குள் பிறந்தநாள் கொண்டாட்டம்.. கேக் வெட்டிய காங் முன்னாள் தலைவர் மணியால் சர்ச்சை

பதிவு செய்த நாள்

29 அக்
2021
06:10

பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே வடமதுரையில் உள்ள அருள்மிகு விருந்தீஸ்வரர் கோவிலில், கோவை வடக்கு மாவட்ட காங்., கட்சியின் முன்னாள் தலைவர் மணி, தனது பிறந்தநாளை முட்டை கலந்த கேக் வெட்டி கொண்டாடியதால், சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டம், துடியலூர் அருகே வடமதுரையில் விருந்தீஸ்வரர் கோவில் உள்ளது. பழமையான இக்கோவில், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது. இக்கோவிலில் உள்ள விஸ்வ நாயகி அம்பாள் சன்னதி முன்பு கடந்த, 27ம் தேதி கோவை வடக்கு மாவட்ட காங்., கட்சியின் முன்னாள் தலைவர் மணி, தனது பிறந்தநாளை கட்சியினருடன் இணைந்து, கேக் வெட்டி கொண்டாடினார். முட்டை கலந்த கேக்கை, கோவிலுக்குள் வைத்து வெட்டியது, ஹிந்து பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து, கோவை வடக்கு மாவட்ட ஹிந்து முன்னணி செய்தி தொடர்பாளர் ஜெய் கார்த்தி கூறுகையில்," பழம் பெருமை வாய்ந்த அருள்மிகு விருந்தீஸ்வரர் கோவிலில் முட்டை கலந்த கேக் வெட்டி, பிறந்தநாள் கொண்டாடியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற செயல் கோவிலின் புனித தன்மையை கெடுத்துவிடும். எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காத வண்ணம், உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்" என்றார்.

இதுகுறித்து, கோவை வடக்கு மாவட்ட காங்., கட்சியின் முன்னாள் தலைவர் மணி கூறுகையில்," கடந்த பல ஆண்டுகளாக பொலிவு இழந்து கிடந்த, அருள்மிகு விருந்தீஸ்வரர் கோவிலை புனரமைத்து, கும்பாபிஷேகம் நடத்தும் பணியில் பெரும் பங்காற்றி உள்ளேன். கோவிலின் புனிதத் தன்மையை கெடுக்கும் எண்ணம் சிறிதும் இல்லை. ஆர்வமிகுதியால் கட்சியில் உள்ள தொண்டர்கள் சிலர், கோவிலுக்குள் கேக்கை கொண்டு வந்து விட்டதால், அதை வெட்டும் நிலை ஏற்பட்டது. எதிர்காலத்தில் இது போன்ற செயல்கள் கோயிலுக்குள் நடப்பதை தவிர்ப்போம்" என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
சிவகாசி; சிவகாசி அருகே திருத்தங்கலில் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் ஆனி பிரமோற்சவ திருவிழாவை ... மேலும்
 
temple news
கோவை; கொடிசியா வெங்கடேச பெருமாள் கோவிலில் ஆனி மாதம் திருவோண விரதத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
சபரிமலை; நவக்கிரக பிரதிஷ்டைக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. நாளை காலை 11:30 மணிக்கு நவக்கிரக ... மேலும்
 
temple news
காரைக்குடி; சாக்கோட்டையில் உள்ள சாக்கை வீரசேகர உமையாம்பிகை கோயில் ஆனித் திருவிழா தேரோட்டம் இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar