பதிவு செய்த நாள்
30
அக்
2021
11:10
மதுரை : மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் அறங்காவலர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என ஹிந்து அறநிலையத்துறை அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பத்தை கோயில் அலுவலகம் அல்லது இணை கமிஷனர், உதவிகமிஷனர் அலுவலகத்தில் பெற்று பூர்த்தி செய்து நவ.,15க்குள் எல்லீஸ் நகரில் உள்ள இணைகமிஷனர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்தில் கேட்பது என்னமொத்தம் 20 கேள்விகள் அடங்கிய விண்ணப்பம் வழங்கப்படுகிறது. சாதி, வைணவமா, சைவமா, வசிக்கும் இடத்திற்கும் கோயிலுக்கும் உள்ள துாரம், தொழில், மாத வருமானம், கல்வித்தகுதி, தாய்மொழி, சொத்து விபரம், அதன்மூலம் கிடைக்கும் வருவாய், கடன் உண்டா, வருமானம் செலுத்துபவரா போன்ற கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. மேலும் கோயில்களில் விண்ணப்பதாரரோ, குடும்பத்தினரோ தர்மகாரியம் செய்தது உண்டா அல்லது கட்டளை நிறைவேற்றப்பட்டு வருகிறதா, இதற்கு முன் அறங்காவலராக இருந்துள்ளாரா, அல்லது நீக்கப்பட்டிருக்கிறாரா, உறவினர்கள் அறங்காவலராக உள்ளார்களா, கோயில் குத்தகைதாரரா என கேட்கப்பட்டுள்ளது. தவிர, விண்ணப்பதாரருக்கு ஊரில் நற்பெயர் உள்ளதா, கடவுள் நம்பிக்கை உள்ளவரா, கோயில் நிகழ்ச்சிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள நேரம் உள்ளவரா எனவும் கேட்கப்பட்டுள்ளது. இதேபோல் தமிழகத்தின் பல்வேறு கோயில்களுக்கும் அறங்காவலர் பதவிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.