பதிவு செய்த நாள்
30
அக்
2021
11:10
புதுச்சேரி: அரியாங்குப்பம் செடிலாடும் செங்கழுநீர் மாரியம்மன் கோவிலில், 7ம் ஆண்டு கந்தர் சஷ்டி சூரசம்ஹார திருவிழா வரும் 4ம் தேதி நடக்கிறது. அன்று இரவு 8:00 மணிக்கு கணபதி வழிபாடு நடக்கிறது.
மயிலம் பொம்மபுர ஆதினம் சிவஞான பாலய சுவாமிகள் விரதம் துவக்கி வைத்து பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார். அரியாங்குப்பம் எம்.எல்.ஏ., பாஸ்கர் தலைமை தாங்குகிறார். வரும் 5ம் தேதி மாலை 6:00 மணிக்கு சம்ஹார வேல் அபிஷேகம், 6ம் தேதி மாலை 6:30 மணிக்கு சூரபதுமன் திக்கு விஜயம், 7ம் தேதி மாலை 6:30 மணிக்கு முருகபெருமான் சிவபூஜை நடக்கிறது.8ம் தேதி மாலை 6:30 மணிக்கு கந்தர் அலங்காரம் தலைப்பில் கவிஞர் கோவிந்தராசு சொற்பொழிவு மற்றும் வேல் வாங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. 9ம் தேதி காலை 10:35 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், மதியம் 2:30 மணிக்கு நவ வீரர்கள் ஊர்வலம், மாலை 4:30 மணிக்கு கந்தர் சஷ்டி சூரசம்ஹாரம் நடக்கிறது.சம்ஹார வேலுக்கு பாலாபிஷேகம், பக்தர்களுக்கு அன்னதானம் நடக்கிறது. வரும் 10ம் தேதி காலை 7:15 மணிக்கு திரவுபதியம்மன் கோவிலில் பெண் அழைப்பு, காலை 9:00 மணிக்கு வள்ளி தெய்வானை உடனுறை சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர், சிவசக்தி வேலன் ஆன்மிகக் குழுவினர், கந்தர் சஷ்டி விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.