உ உத்தரகன்னடா: கொரோனா கட்டுக்குள் வந்ததாலும், மழை குறைந்ததாலும், உத்தரகன்னடாவின் பிரசித்தி பெற்ற முருடேஸ்வராவுக்கு வரும் பக்தர்கள், சுற்றுலா பயணியர் எண்ணிக்கை ஏறுமுகமாக உள்ளது. இங்குள்ள தங்கும் விடுதிகள், ஓட்டல்களின் அறைகள் நிரம்பியுள்ளன. கடைகளிலும் வியாபாரம் வெகு ஜோராக நடக்கிறது. கடற்கரையில் உள்ள சிறு, சிறு கடைகளிலும் வியாபாரம் நன்றாக நடக்கிறது. வாகனங்களை நிறுத்த இடமின்றி, கார்கள், டெம்போக்கள் கடற்கரையில் நிறுத்தப்படுகிறது. சில மாதங்களாக சுற்றுலா பயணியர் இல்லாமல் மந்தமாக தென்பட்ட முருடேஸ்வரா, தற்போது களை கட்டியுள்ளது. வியாபாரிகளும் குஷியடைந்துள்ளனர்.