திருச்செந்துார் கந்தசஷ்டி விழா : பாதுகாப்பு பணியில் 1500 போலீசார்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30அக் 2021 02:10
திருச்செந்துார்: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடக்கும் சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாண தினமான 9ம் தேதி மற்றும் 10ம் திகளில் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்படுவார்கள் என்று எஸ்.பி., ஜெயக்குமார் தெரிவித்தார்.
திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா குறித்து தனியார் லாட்ஜ் உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் னியார் லாட்ஜியில் நடந்தது. எஸ்.பி., ஜெயகுமார் தலைமை வகித்து பேசியதாவது: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா 4ம் தேதி துவங்கி 15ம் தேதி வரை 12 நாட்கள் நடக்கிறது. இதில் சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாண தினத்தன்று பக்தர்கள் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. மற்ற நாட்களில் தினசரி 10 ஆயிரம் பேர் தரிசனத்திற்கு ஆன் லைன் மூலம் அனுமதிக்கப்படுகின்றனர். கோயில் பிரகாரத்தில் பக்தர்கள் தங்கி விரதமிருக்க அனுமதியில்லை. அதே போல் அங்கபிரதட்சணம் செய்வது, தனியார் அமைப்புகள் அன்னதானம் வழங்குவது தடை செய்யப்பட் டுள்ளது . இங்குள்ள விடுதிகள், திருமண மண்டபங்கள், சமுதாய மடங்களில் பக்தர்கள் ஜ் முறையில் ங்குவதற்கு டை செய்யப்பட்டுள்ளது. 9ம் தேதி மற்றும் 10ம் தி திருச்செந்துார் கோயில் வளாகத்திற்குள் யாரும் வராதபடி கண்காணிக்க 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்படுவார்கள். இவ்வாறு அவர் பேசினார். திருச்செந்துார் போலீஸ் ஏ.எஸ்.பி. ஹர்ஷ்சிங், ஆர்.டி.ஓ., கோகிலா, லாட்ஜ் அசோசியோஷன் தலைவர் அருள், செயலாளர் ரமணி, தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன் உட்பட பலர் கலந்து கொண்டன