பதிவு செய்த நாள்
30
அக்
2021
02:10
திருப்பூர்: கொங்கணகிரி கந்தப்பெருமான் கோவிலில், ஓரம் கட்டப்பட்டிருந்த, கும்பாபிஷேக விழா கல்வெட்டை, எம்.எல்.ஏ., செல்வராஜ்,திருப்பூர், கொங்கணகிரியில், பிரசித்தி பெற்ற ஸ்ரீவள்ளி, தேவசேனா சமேத ஸ்ரீகந்தபெருமான் கோவில் உள்ளது.
திருப்பூர் மக்கள் நல அறக்கட்டளையினர், தொழில்துறையினர், பக்தர்கள் இணைந்து, திருப்பணியை மேற்கொண்டனர்.புதிய ராஜகோபுரம் கட்டி, 2019 ஏப்., 22ல், கும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி, மக்கள் நல அறக்கட்டளை மற்றும் அணைப்பாளையம் பொதுமக்கள் சார்பில், கல்வெட்டு வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்துஅறநிலையத்துறை அதிகாரிகள் அனுமதி மறுத்ததால், தயாரான கல்வெட்டு, கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்றைய பாராட்டு விழாவுக்கு வந்திருந்த, திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., செல்வராஜிடம், இதுகுறித்து முறையிட்டனர்.கோவில் செயல் அலுவலர் சுந்தரியை அழைத்து, அறநிலையத்துறை இணை கமிஷனர் மற்றும் உதவி கமிஷனர்களை, தொலைபேசியில் அழைக்க அறிவுறுத்தினார். அதிகாரிகள், இணைப்பில் கிடைக்காததால், அறக்கட்டளை நிர்வாகிகளுடன், எம்.எல்.ஏ.,வும் சேர்ந்து, ஆறு அடி உயர கல்வெட்டை துாக்கிச்சென்று, சுவற்றில் பதிக்க ஏற்பாடு செய்திருந்த பகுதியில் நிறுத்தி வைத்தனர். எம்.எல்.ஏ., நேரில் வந்து, கல்வெட்டை பதித்தார் என்று, அதிகாரிகளிடம் கூறிவிடுங்கள், என்று, கோவில் செயல் அலுவலரிடம் கூறிவிட்டு, செல்வராஜ் அங்கிருந்து புறப்பட்டார்.