பண்ணாரி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்; ஆலோசனை கூட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30அக் 2021 09:10
ராசிபுரம்: பண்ணாரி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் செய்வது குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. ராசிபுரம் அருகே வையப்பமலை அடுத்த பெரியமணலி பண்ணாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடத்துவது குறித்து சுற்றுவட்டார எட்டுப்பட்டி ஊர் மக்கள் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், நவ., 15ல் கும்பாபிஷேகம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. விழாவை சிறப்பாக நடத்துவது, கொரோனா தடுப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்க வலியுறுத்துவது குறித்தும் மக்கள் ஆலோசனை நடத்தினர். கும்பாபிஷேக விழாவை சிறப்பாக நடத்த ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.