தேவகோட்டை : தேவகோட்டை இறகுசேரி சுடலைமாடன் சுவாமி கோயில், மஞ்சனை பேச்சியம்மன் கோயில், பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. ரவிகுருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் இரண்டு கால யாகபூஜை செய்தனர். புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். பின் மகா அபிஷேகம் நடந்தது.