துாத்துக்குடியில் ஐப்பசி தேரோட்டம் : அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் ரதவீதி உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30அக் 2021 09:10
துாத்துக்குடி: துாத்துக்குடி பாகம்பிரியாள் அம்மன் தேரோட்டம் இன்று நடக்கிறது. இதனை ஒட்டி தேர் அலங்காரம் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது. தேரோட்டத்தை ஒட்டி இந்த பகுதியில் உள்ள சில தெருக்களில் மின் தடை செய்யப்பட்டுள்ளது. துாத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சங்கரராமேஸ்வரர், பாகம்பிரியாள் கோயில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் சுவாமி, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேக அலங்கார தீபாரதனைகள் நடந்து வருகிறது. தினமும் மாலையில் பாகம்பிரியாள் அம்மன் ஒவ்வொரு வாகனத்தில் வீதி உலா வருதல் நடந்தது. ஒன்பதாம் திருவிழாவான இன்று தேரோட்டம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் பாகம்பிரியாள் அம்மன் வீதி உலா வந்து அருள்பாலித்தார். நாளை பத்தாம் திருநாள் அன்று தீர்த்தவாரி நடக்கிறது . சிவ பூஜை செய்து அம்மன் பூம்பல்லக்கில் வீதி உலா வருதல் நடக்கிறது . நாளை மறுநாள் ராமேஸ்வர், பாகம்பிரியாள் அம்மனுக்கு திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி கிருஷ்ணமூர்த்தி, அர்ச்சகர் செல்வம் பட்டர் மற்றும் அர்ச்ெசகர்கள், பணியாளர்கள், உபயதாரர்கள், மண்டகபடி தாரர்கள் செய்துள்ளனர்.