திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் அறங்காவலராக வாய்ப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31அக் 2021 07:10
மதுரை : திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் அறங்காவலர் பதவிக்கு நவ.,15க்குள் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.எல்லீஸ்நகரில் உள்ள ஹிந்து அறநிலையத்துறை இணை கமிஷனர் அலுவலகத்தில் விண்ணப்பம் பெறலாம். மேலும் உதவி கமிஷனர் அலுவலகம், ஆய்வாளர், கோயில் அலுவலகத்திலும் விண்ணப்பம் பெறலாம். மேலும் விபரங்களை கோயில் அலுவலகத்தில் கேட்டு அறியலாம் என ஹிந்து அறநிலையத்துறை அறிவித்துள்ளது.