பழநி :பழநி சிவகிரிபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட நேரு, நேதாஜி நகர் நலச் சங்கம் சார்பில் 25 சிசிடிவி., கேமராக்கள்அப்பகுதி தெருக்களில் பொருத்தப்பட்டன. அவற்றுக்கான கட்டுப்பாட்டு அறையை திண்டுக்கல் எஸ்.பி. ஸ்ரீனிவாசன் துவக்கி வைத்தார்.அவர் கூறியதாவது: பழநி நகரைச் சுற்றிலும் சண்முகநதி, ரயில் நிலையம், பைபாஸ் ரோடு உட்பட பல இடங்களில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். இந்தக் கேமரா குற்றச் செயல்களை தடுப்பது மட்டுமின்றி, குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை எளிதாக கண்டறியவும் உதவுகிறது. ஒரு கேமரா 3 போலீசார் அப்பகுதியில் பணியாற்றுவதற்கு சமமானது" என்றார். நலச்சங்க தலைவர் சின்னசாமி, டி.எஸ்.பி., சத்தியராஜ், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் கலந்து கொண்டனர்.