திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட கிராம கோயில் பூஜாரிகள் ஒன்றிய பொறுப்பாளர்கள் கூட்டம் மாவட்ட அமைப்பாளர் பழனிச்சாமி தலைமை வகித்தார். அருள்வாக்குப் பேரவை நிர்வாகி சாமி, இணை அமைப்பாளர் சுப்பையா முன்னிலை வகித்தனர். ஒன்றிய அமைப்பார் சந்திரசேகரன் வரவேற்றார்.அனைத்து கிராம கோயில் பூஜாரிகளுக்கும் மாத ஊக்கத் தொகை, கிராம கோயில்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும். பூஜாரிகள் நலவாரியத்தை செம்மைப்படுத்தி, உதவித்தொகை வழங்க வேண்டும். கிராம கோயில் பூஜாரிகளுக்கு இலவச தொகுப்பு வீடுகள் கட்டித்தர வேண்டும். கிராம கோயில்களுக்கு பட்டா வழங்க வேண்டும். நகர அமைப்பாளர் சக்திவேல் நன்றி கூறினார்.