Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சதுரகிரியில் மழை: நவ.,5ம் தேதி வரை ... ராமேஸ்வரம் கோவில் தீர்த்தத்தில் புனித நீராடிய பக்தர்கள் ராமேஸ்வரம் கோவில் தீர்த்தத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திட்டை குரு பகவான் கோவிலில் குருபெயர்ச்சி விழாவுக்கு பந்தக்கால்
எழுத்தின் அளவு:
திட்டை குரு பகவான் கோவிலில் குருபெயர்ச்சி விழாவுக்கு பந்தக்கால்

பதிவு செய்த நாள்

02 நவ
2021
09:11

 தஞ்சாவூர் : குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு, திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் (குரு பரிகாரத்தலம்) பந்தக்கால் நடப்பட்டது.

குரு பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு ஆண்டுக்கு ஒருமுறை இடம்பெயர்வது, குரு பெயர்ச்சி என அழைக்கப்படுகிறது. அதன்படி வரும் நவ., 13ம் தேதி, குரு பகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்கிறார். இதையடுத்து தஞ்சாவூர் அருகே குரு பரிகாரத்தலம் என போற்றப்படும், திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில், குரு பெயர்ச்சியை முன்னிட்டு நேற்று வசிஷ்டேஸ்வரர், குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்பட்டன.

பின்னர் பந்தகால் மரத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி, முகூர்த்தம் செய்து நடப்பட்டது. இதில் கோவில் செயல் அலுவலர் தனலெட்சுமி மற்றும் உபயதாரர்கள், ஊர் பொதுமக்கள், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.  குரு பெயர்ச்சி நவ., 13ம் தேதி மாலை, 6.21 மணிக்கு இடம் பெயர்வதால் ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம், மீனம் ஆகிய ராசிகாரர்கள் பரிகாரம் செய்து கொள்ளலாம்.


கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கப்படுவதால், குரு பெயர்ச்சி அன்று பக்தர்கள் தரிசனத்துக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவர். அர்ச்சனை, சிறப்பு வழிபாடுகள் ஏதும் கிடையாது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. குரு பெயர்ச்சியை முன்னிட்டு வரும், 15ம் தேதி ஒரு நாள் மட்டும் லட்சார்ச்சனை நடைபெறுகிறது. அதேபோல் நவ., 21ம் தேதி சிறப்பு பரிகார ஹோமம் நடக்கிறது. இதில் பரிகாரம் செய்ய வேண்டிய பக்தர்கள், அதற்கான தொகையை கோவில் நிர்வாகத்தில் செலுத்தி ரசீதை பெற்றுக்கொள்ளலாம். அதற்கான பிரசாதம் தபால் மூலம் மட்டுமே அனுப்பி வைக்கப்படும் என்று, கோவில் செயல் அலுவலர் தனலட்சுமி தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மகாளய பட்ச காலத்தில் வரும் அஷ்டமி மத்யாஷ்டமி ஆகும். மகாளய பட்ச காலத்தின் நடுவே, அஷ்டமி திதி வரும் நாள் ... மேலும்
 
temple news
திருக்குறுங்குடி; திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் 9 நாட்கள் நடந்து வந்த பவித்ர உற்சவம் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி, திருப்புல்லாணி அருகே தாதனேந்தல் ஊராட்சிக்குட்பட்ட பள்ளப்பச்சேரி கிராமத்தில் உள்ள ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அருள்மிகு தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் திருக்கோயிலில் நவராத்திரி ... மேலும்
 
temple news
கோவை; தாமஸ் வீதி - தெலுங்கு வீதி சந்திப்பில் அமைந்துள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் புரட்டாசி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar